ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி.. போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு..!

உத்தரபிரதேசத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியாவில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் என்பவர், அந்தப் பகுதியில் பிச்சை எடுக்கும் ஏழை குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ரஞ்சித் கூறுகையில், “நான் இந்த பகுதியில் சொந்தமாக பள்ளியை தொடங்கி, எனக்கு விடுமுறை கிடைக்கும் நேரங்களில் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து வருகிறேன். இதையும் படிக்க | TNPSC - ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்வு மையம் மாற்றம் தொடர்பான செய்தி வெளியீடு - PDF

இங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பிச்சை எடுப்பதை நான் அடிக்கடி நேரில் பார்த்தேன். அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது தொடர்பாக அவர்களிடம் பேசினேன். அதில் பலர், தங்கள் குழந்தைகள் கல்வி கற்பதற்கு ஆர்வமாக இருந்தனர்” என்றார்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘நாங்கள் இங்கு படித்து முடித்து விட்டு, பள்ளிக்கு சென்று படிக்க விரும்புகிறோம். இங்கு படிக்கும் போது நாங்கள் நன்றாக கல்வி கற்பதாக உணர்கிறோம். எனவே, நாங்கள் தவறாமல் இங்கு படிக்க வருகிறோம்’ என தெரிவித்தனர்.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்தின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post