மாணவர்கள்& பெற்றோர்கள் கவனத்திற்கு - மழை& குளிர்காலத்தில் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில பயனுள்ள குறிப்புகள்

🙏அன்பிற்கினிய மாணவர்கள் & பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் மழைக்காலம் முன்னிட்டு கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றி மழை & குளிர்காலத்தில் தங்களை பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🌸 கனமழை நேரத்தில் குழந்தைகள் & மாணவச்செல்வங்கள் வயதானவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்புடன் இருங்கள். 

🌸அவசியம் கருதி வெளியில் செல்லும் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் (குடை & மழை கோட் மைக்கா பை) புது மழையில் நனையாமல் சென்று வாருங்கள்.

🌸மின்சாதனப் பொருட்களை ஈரக்கையால் தொடாதிர்கள்

🌸 தெருக்களில் பிளாஸ்டிக் குப்பைகள் பாட்டில் போன்ற பொருட்களை மழைநிரில் தேங்கவிடாமல் அப்புறப்படுத்தி வெள்ளம் போக வழி செய்யுங்கள்.

🌸வீட்டைச்சுற்றி நீர் தேங்காமல் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

🌸குடிக்கும் குடிநீரை கொதிக்க வைத்து அதில் சீரகம் ஓமம் துளசி இட்டு குடியுங்கள்.

🌸 வீட்டில் செய்யும் உணவுகளை மட்டுமே வெதுவெதுப்புடன் உண்ணுங்கள்.

🌸மூக்கடைப்பு தலைவலி ஏற்பட்டால் ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரில் மஞ்சள் துளசி வேம்பு நொச்சி தைலதழை கல் உப்பு போட்டு கொதிக்க வைத்து வேது பிடியுங்கள்.

🌸 செக்கு தேங்காய் 
எண்ணெய் ஒரு கரண்டியளவு காய்ச்சி அதில் பத்து ரூபாய் கட்டி கற்பூரம் போட்டு ஆற வைத்துக்கொண்டு சளி தலைவலி இருந்தால் தேய்த்து கொள்ளுங்கள்.

🌸 1 கிலோ கேழ்வரகு அரை கிலோ சோளம் அரை கிலோ கம்பு சேர்த்து அரைத்த மாவு & 2கிலோ கோதுமை அரை கிலோ பார்லி சேர்த்து அரைத்த மாவு கொண்டு தோசை அடை ரொட்டி புட்டு கஞ்சி போன்ற உணவினை செய்து உண்ணுங்கள்.

🌸 சாமை வரகு குதிரைவாலி திணை போன்ற பொருட்களை கொண்டு செய்யும் உணவினை காலை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்

🌸 4 துளசி, 1வெற்றிலை , 2கற்பூரவள்ளி, ஒரு இணுக்கு முருங்கைகீரை, 4குப்பைமேனி 4முசுமுசுக்கை, உடன் 5 மிளகு, ஒரு சிட்டிகை சீரகம், இஞ்சி சிறிது, பூண்டுபல் 2 சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வாரம் இருமுறை காலையில் ஒரு நபருக்கு கால் டம்ளர் குடிக்கவும்.

 50 கிராம் சுக்கு , ஒரு ஸ்பூன் மிளகு & சீரகம், 50 கிராம் தனியா சேர்த்து அரைத்து மாலையில் கொதிக்க வைத்து வெல்லம் சிறிது சேர்த்து குடிக்கவும்.

🌸மூக்கடைப்பு தலைபாரம் ஏற்பட்டால் விரல் மஞ்சள் நல்லெண்ணெயில் முக்கி விளக்கில் சுட்டு முகரவும்.

🌸கை கால் முதுகு இடுப்பு வலி ஏற்பட்டால் நல்லெண்ணெயில் சுக்கு மிளகு சீரகம் பூண்டு பல் இடித்து போட்டு காய்ச்சி தேய்த்துக்கொள்ளுங்கள்.
Post a Comment (0)
Previous Post Next Post