இராணிப்பேட்டை மாவட்டம் மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 09/04/22 (சனிக்கிழமை) மெகா அறிவியல் கண்காட்சி -2022 மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.இதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்று சுமார் 50 க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை செய்து கண்காட்சியில் வைத்து விளக்கப்பட்டனர்.இக்கண்காட்சியில் அனைத்து படைப்புகளுமே நன்றாக இருந்தது.
குறிப்பாக ரோபோ வடிவமைப்பு,உள்ளுறுப்புகளின் இயக்கம்,இயற்கை நிகழ்வுகள்,இயற்கை வளங்கள்,பொருட்களின் நகர்வுகள்.உள்ளூர் இனத்தின் தாவரங்கள் ஆகியவை மிக நேர்த்தியாக கண்காட்சியில் வெளிப்படுத்தியிருந்தனர்.இக்கண்காட்சி இப்பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் தி.பரமேசுவரி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இக்கண்காட்சியை இளம் அறிவியல் விஞ்ஞானிகள் குழு அமைப்பு தலைவர் திரு.அ.கமலக்கண்ணன் மற்றும் செயலாளர் திருமதி.பவானி,முதுகலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,இடைநிலை ஆசிரியர்,PTA ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்,அலுவலக ஊழியர்கள் (ம) துப்புறவாளர் ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.