பெண் புள்ளிங்கோ..... மாணவிகள் 10 பேர், 10 நாள் சஸ்பெண்ட்: முதல்வர் நடவடிக்கை

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வடசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரி அமைந்துள்ளது. அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள், கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது இரு தரப்பு மாணவிகளுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டு குடுமிச்சண்டையாக மாறியது. சண்டையில் ஈடுபட்ட மாணவிகளை சுற்றி இருந்த சக கல்லூரி மாணவ, மாணவிகள் விலக்கி விட்டுள்ளனர். இந்த சண்டை கல்லூரி வளாகத்தினுள் ஏற்பட்ட வாய்தகராறு என விசாரணையில் தெரிவிவந்துள்ளது. மேலும் வாய்தகராறு பேருந்து நிறுத்தத்தில் குடுமி சண்டையாக மாறியதும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்த்துறையினர், மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய பி.ஏ. முதலாமாண்டு மாணவிகள் 10 பேரை, 10 நாள் சஸ்பெண்ட் செய்து அரசு கல்லூரி முதல்வர் சுடர்கொடி உத்தரவிட்டார்.
Post a Comment (0)
Previous Post Next Post