அரசு மையங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி - இன்று முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஐஏஎஸ்,ஐபிஎஸ் பயிற்சிமையங்களில்சேர இன்று முதல் வரும் 28ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறி விப்பு:

சென்னையில் உள்ள தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம், கோயம்புத்தூர், மதுரை யில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையங்களில், தமிழ்நாட் டைச்சேர்ந்த இளம்பட்ட தாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோ ருக்கு. 5.6.2022 அன்று நடைபெற இருக்கும் மத் தியதேர்வாணையம் நடத் தும் குடிமைப்பணி தேர் விற்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்க உள்ளது.

சென்னையில் உள்ள மையத்தில் 225 முழுநேர தேர்வர்களையும், 100 பகு திநேர தேர்வர்களையும் முதல்நிலை பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று அண்ணா நூற் றாண்டு குடிமைப் பணித் தேர்வு பயிற்சி நிலையங் கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேர தேர்வர்களை முதல்நிலை தேர்வுக்காக அனுமதிக்கின்றன. 2022ல் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு எழு துவதற்கு, பயிற்சி பெற விரும்புபவர்கள் www. civilservicecoaching.com என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப் பயிற்சிமையங்களில் ஏற்க னவே முதல்நிலைத் தேர் வுக்கு முழுநேரப்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப் பிக்கவேண்டாம்மேலும், பயிற்சியில் சேர விரும்புப வர்கள் தங்கள் கல்வி மற் றும்வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத் தியதேர்வாணையக்குழு வின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள் ளலாம். தகுதியுடைய நபர்கள் 23.1.2022 அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப் படுவர். முதல் நிலைத் தேர்வுக்கான நுழைவு தேர்வு முடிவுகள் விரை வில் வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இன வாரி யாகஉள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாக பயிற் சிக்கு அழைக்கப்படுவர். பிப்ரவரி முதல் வாரத் தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இவ் வாறு கூறப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post