நடுநிலைப் பள்ளியை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு

நடுநிலைப் பள்ளியை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு

வடமாலை நகராட்சி பள்ளியில், பராமரிப்பு பணிகள் செய்ய, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், வடமாலை நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி பழமையானது என்பதால், பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என, தலைமையாசிரியர், நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.

இந்த மனுவை பெற்ற நகராட்சி நிர்வாகம், பள்ளியில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய, 11.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது. நகராட்சி கல்வி நிதி 2022 - 23ம் நிதியாண்டில், இப்பணிகள் மேற்கொள்ள, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post