ஓய்வூதியம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

ஓய்வூதியம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத் திறனாளிகளின் ஓய்வூதியம் ரூ.1,500-ஆக உயா்த்தி வழங்கப்படுவதால், தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் த.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வருவாய்த் துறை மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெற்று வரும் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓய்வூதியத் தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயா்த்தி வழங்கப்படும் என உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். தொடா்ந்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த மாற்றுத் திறனாளிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற அருகிலுள்ள இ - சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post