பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி - தமிழ்வளர்ச்சி துறை - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 6, 2022

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி - தமிழ்வளர்ச்சி துறை

Speech competition is conducted on behalf of the Department of Tamil Development for school and college students in Coimbatore district.

In this regard, the Department of Tamil Development has issued a statement: On behalf of the Department of Tamil Development, on the occasion of the birthdays of Gandhi, Jawaharlal Nehru, Ambedkar, Periyar, Annathurai and Karunanidhi, a grant competition and a certificate of appreciation and appreciation will be given to college and school students at the district level on their birthdays for the year 2021-22. , Notice has been issued.

Accordingly, on the eve of Ambedkar's birthday, a separate speech contest will be held on the 19th for school and college students in all districts. Following this, separate speech competitions for school and college students will be held on the 19th at the meeting hall of Rajaveedi, Textile Merchants Association Government Girls' High School in Coimbatore district. The winning school students at the district level will be given first prize, 5 thousand rupees, second prize, 3 thousand rupees, third prize, 2 thousand rupees. Three prize money will be given to the college students. Out of the students participating in the speech competition for school students, two government school students will be selected individually and each will be given a special prize of Rs 2,000, the statement said.

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழ்வளர்ச்சி துறை சார்பில் பேச்சு போட்டி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ் வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்வளர்ச்சி துறை சார்பில், 2021-22ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று, மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, பேச்சு போட்டி நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, வரும், 19ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, தனித்தனியே பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. இதன்தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில், 19ம் தேதி ராஜவீதி, துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் கூட்ட அரங்கில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு, 5 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு, 3 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு, 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கல்லுாரி மாணவர்களுக்கும் மூன்று பரிசு தொகைகள் வழங்கப்படுகின்றன.பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில், பங்கேற்கும் மாணவர்களில், அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தனியாக தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக, 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot