நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்ற வேண்டாம்: வானதி காட்டம்

''நீட் தேர்வு விவகாரத்தில் மக்களையும் மாணவர்களையும் தி.மு.க. ஏமாற்ற வேண்டாம்'' என பா.ஜ. மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ. சார்பில் பிரதமர் மோடியின் 20 ஆண்டு மக்கள் பணியை பெருமைப்படுத்தும் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியதாவது: உ.பி. வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

வேளாண் திருத்த சட்டத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. காங். ஆட்சி செய்த காலத்தில் தான் வேளாண் சட்டங்களுக்கான அடிப்படை தரவுகள் சேகரிக்கப்பட்டு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என பரிந்துரைத்தது. தற்போது சட்டத்தை கொண்டு வந்த பின் எதிர்க்கின்றனர். 'நீட்' தேர்வு சுப்ரீம் கோர்ட்டால் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. மாணவர்களை ஏமாற்றாமல் யதார்த்தத்தை தி.மு.க. சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
Post a Comment (0)
Previous Post Next Post