அனைத்து பள்ளிகளிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அலகு தேர்வு

ஒவ்வொரு பாடத்திலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து அலகு தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் பள்ளிகளில் பதிவு செய்யப்படுகிறது.

கொரோனா பரவலுக்கு இடையே கடந்த மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஒரு மாதமாக மாணவ- மாணவிகள் பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர அலகு தேர்வு நாளை முதல் தொடங்குகிறது. அனைத்து பள்ளிகளிலும் இத்தேர்வுகள் மாவட்ட வாரியாக நடக்கிறது. அந்தந்த மாவட்டங்களிலேயே வினாத்தாள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு இணையதளம் வழியாக அனுப்பப்படுகிறது.

ஒவ்வொரு பாடத்திலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் பள்ளிகளில் பதிவு செய்யப்படுகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post