KalviseithiDaily: Education

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Friday, January 6, 2023

பள்ளிகளில் ஜப்பான் தொழில்நுட்ப கருவிகள் மூலம் கல்வி முறை சென்னையில் அறிமுகம்

January 06, 2023 0


ஜப்பான் தொழில்நுட்ப கருவிகள் மூலம் கல்வி முறை சென்னையில் அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஜப்பான் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப கருவிகள் மூலம் மாணவா்கள் எளிதாக கற்கும் முறையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 18 சென்னைப் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைப்பட்டிகை ஆகிய ஜப்பான் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பச் சாதனங்கள் ரியான் டெக் நிறுவனத்தின் சாா்பில் விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது.

முதல்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை சென்னை உயா்நிலைப்பள்ளி, கொய்யாத்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, இருசப்பா தெரு சென்னை உயா்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்னை நடுநிலைப்பள்ளி என 5 பள்ளிகளில் இந்த தொழில் நுட்பச் சாதனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இப்புதிய கல்வி கற்கும் முறையை, சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆற்றுச்சாலையில் உள்ள சென்னை உயா்நிலைப் பள்ளியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதன் மூலம் ஆசிரியா்களின் கற்பித்தல் முறை, மாணவா்களின் கற்றல் முறை எளிதாக்கப்பட்டு, பொதுத் தோ்வுகள் மற்றும் போட்டித் தோ்வுகளை சுலபமாக மாணவா்கள் எதிா்கொள்ளவும் முடியும்.

நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, பணிகள் குழுத் தலைவா் நே.சிற்றரசு , மண்டலக்குழுத் தலைவா்கள் எஸ்.மதன்மோகன், பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினா் ரா. ஜெகதீசன், ரியான் டெக் நிறுவன இயக்குநா் ஸ்டீபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Read More

Tuesday, April 26, 2022

வெளிநாட்டில் படிக்க எப்படி எளிதாக கல்விக் கடனை பெறலாம்; இதோ உங்களுக்கான சில டிப்ஸ்!

April 26, 2022 0
வெளிநாட்டில் படிக்க எப்படி எளிதாக கல்விக் கடனை பெறலாம்; இதோ உங்களுக்கான சில டிப்ஸ்!

சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் சுமார் 1.8 மில்லியன் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வியைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைலைட்ஸ்:

ஏராளமான மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.

இதற்கு வங்கிகள் தவிர, பல நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. புலமைப்பரிசில் உதவியுடன் வெளிநாட்டிலும் படிக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுகின்றனர். அத்தகைய கனவுடைய மாணவர்கள் தங்களின் மேற்படிப்பிற்காக படிப்பிற்காக எவ்வாறு கடன் பெறலாம் என தேடலில் ஈடுபடுகின்றனர். ஆனால், கடன் பெறுவதற்கான செயல்முறை நாம் நினைக்கும் அளவுக்கு எளிதானது அல்ல. சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் சுமார் 1.8 மில்லியன் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வியைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், கல்விக் கடனை எந்தெந்த வழிகளில் எளிதாக பெறலாம் என்பதை உங்களுக்கு நாங்கள் கூறுகிறோம்.

நிறுவனத்தின் நற்பெயர்...

குறைந்த கட்டணம் உள்ள ஆனால் மிகவும் பிரபலமாக இல்லாத ஒரு நாட்டை அல்லது கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதில் மாணவர்கள் பெரும்பாலும் தவறு செய்கிறார்கள். இந்த முடிவு பொதுவாக மாணவர்களின் பட்ஜெட்டை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், ஒரு கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், ஒரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களின் புகழ் மற்றும் வெற்றி விகிதத்தைப் பொறுத்து பெரும்பாலும் குறைந்த கட்டணத்தில் கடன்கள் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வங்கிகள் தவிர மற்ற நிறுவனங்களும் கடன் வழங்குகிறது...

வெளிநாட்டில் உயர்கல்வி என்று வரும் போது, கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களைத் தவிர, ப்ராடிஜி ஃபைனான்ஸ் மற்றும் எம் பவர் ஃபைனான்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்கள் கல்விக் கடன்களை வழங்குகின்றன மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் சர்வதேச மாணவர்களுக்கு கடன் பெற உதவுகின்றன. நல்ல கடன் மதிப்பெண்...

மற்ற கடனைப் போலவே, நல்ல கிரெடிட் ஸ்கோர் என்பது ஒப்புதலுக்கான அதிக வாய்ப்புகளைக் குறிக்கிறது. எனவே, அனைத்து கடன்களையும் சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தேவை...

உங்கள் KYC ஆவணங்களைத் தெரிந்துகொள்வதைத் தவிர, சம்பளம் மற்றும் வருமான வரிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்களைத் தயாராக வைத்திருங்கள். கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர் மற்றும் பிணையத்தை வழங்கும் நபர் கடந்த சில ஆண்டுகளின் ஐடிஆர் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தல் கடிதத்தையும் அங்கிருந்து பெறப்பட்ட மற்ற ஆவணங்களையும் உங்களுடன் வைத்திருக்கவும்.

உதவித்தொகைகளை ஆராயுங்கள்...

பல்வேறு கல்வி அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பகுதி உதவித்தொகைகளை வழங்குகின்றன. பல்வேறு திட்டங்கள் மற்றும் கடன்களுடன் உதவித்தொகைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், விண்ணப்பச் செயல்முறைக்கு முன்பாகவோ அல்லது அதற்கு முன்பாகவோ உதவித்தொகையை ஆராயுங்கள். டாடா அறக்கட்டளை, ஆகா கான் அறக்கட்டளை மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து சில பூஜ்ஜிய சதவீத கடன் தயாரிப்புகள் மற்றும் மானியங்கள் கிடைக்கின்றன. GyanDhan மற்றும் We Make Scholars போன்ற நிறுவனங்கள் கடன் மற்றும் உதவித்தொகை திட்டங்களில் மாணவர்களுக்கு உதவுகின்றன.
Read More

Thursday, March 24, 2022

6ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தடை

March 24, 2022 0
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசு தலைநகர் காபூலை கடந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கைப்பற்றி, ஆட்சி அமைத்தது. அப்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. ஆனால், 2 மாதங்களுக்குப் பிறகு சிறுவர்கள், 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது 7 மாதங்களுக்கு பிறகு மார்ச் 23ம் தேதி துவங்கும் கல்வியாண்டின் தொடக்கத்தில் பெண்கள் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, காபூல் உட்பட பல மாகாணங்களில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவற்றை மூடும்படி தலிபான் அரசு உத்தரவிட்டது. மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் கலாசாரத்தின் அடிப்படையில், பெண்களுக்கான கல்வி குறித்து வரையறை செய்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும். அதுவரையில் 6ம் வகுப்பு முதல் அனைத்து பெண்கள் பள்ளிகள் மறுஉத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாண்டு தொடங்கிய நிலையில், 6ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டு இருப்பதற்கு சர்வதேச நாடுகள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Read More

Sunday, March 20, 2022

அனைவருக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

March 20, 2022 0
அனைவருக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கையில் பட்டத்தத்துடனும் எதிர்காலம் குறித்த ஏக்கத்ததுடனும் இருப்பவர்களின் ஏக்கங்கள் தீரும், வேலைவாய்ப்பை உருவாக்குவது, அதற்கான தகுதியான நபர்களை உருவாக்குவது என அரசு செயல்பட்டுவருகிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Read More

Sunday, January 9, 2022

மாநிலப் பட்டியலில் கல்வி??

January 09, 2022 0
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முதல்வா் மு.க.ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நீட் தோ்வு பிரச்னைக்காக சந்திக்கச் சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் அடங்கிய தூதுக்குழுவைச் சந்திக்க மறுத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை மிகக் கடுமையாக கண்டனம் செய்கிறேன். பல்கலைக்கழகத் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதை மாற்றுவதற்குத் தமிழக அரசு செய்துள்ள முடிவை வரவேற்கிறேன்.

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதுதான் எல்லாப் பிரச்னைகளுக்குமே அடிப்படை காரணம். இதன் விளைவாகத்தான், மத்திய அரசு கல்வித் துறையில் நுழைந்து ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாலொழிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியாது.

எனவே, ஒத்தக் கருத்துடைய பல்வேறு மாநில முதல்வா்களையும் ஒருங்கிணைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவரும் முயற்சியில் தமிழக முதல்வா் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளாா் பழ.நெடுமாறன்.
Read More

Sunday, December 26, 2021

கல்வி உதவித்தொகை வருமான வரம்பு உயர்வு

December 26, 2021 0
கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தில், பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற, பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு, ௨ லட்சம் ரூபாயாக இருந்தது. இதை நடப்பாண்டு முதல், 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மூன்றாண்டு இளங்கலை மாணவர்களுக்கு, எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு, கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம் படிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பு, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot