மாநிலப் பட்டியலில் கல்வி??

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முதல்வா் மு.க.ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நீட் தோ்வு பிரச்னைக்காக சந்திக்கச் சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் அடங்கிய தூதுக்குழுவைச் சந்திக்க மறுத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை மிகக் கடுமையாக கண்டனம் செய்கிறேன். பல்கலைக்கழகத் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதை மாற்றுவதற்குத் தமிழக அரசு செய்துள்ள முடிவை வரவேற்கிறேன்.

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதுதான் எல்லாப் பிரச்னைகளுக்குமே அடிப்படை காரணம். இதன் விளைவாகத்தான், மத்திய அரசு கல்வித் துறையில் நுழைந்து ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாலொழிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியாது.

எனவே, ஒத்தக் கருத்துடைய பல்வேறு மாநில முதல்வா்களையும் ஒருங்கிணைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவரும் முயற்சியில் தமிழக முதல்வா் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளாா் பழ.நெடுமாறன்.
Post a Comment (0)
Previous Post Next Post