மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் - பள்ளிக்கல்வித்துறை

பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனம்!

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு தொடக்க விழா மற்றும் அது தொடர்பான வாகனங்கள் தொடக்க விழா சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்வில் பங்கேற்று விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார்.

மருத்துவ குழுவினர் அடங்கிய 805 விழிப்புணர்வு வாகனங்களில் பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் குறித்து விழிப்புணர்வு தரப்பட உள்ளது.

தேர்வு அச்சம், மன ரீதியான அழுத்தங்களை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது. பள்ளிகளில் மருத்துவ முகாம் நடைபெறும் போது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களும் வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post