''மேயருக்காக, பெருமாளையே, 'யூ டர்ன்' அடிக்க வச்சிட்டாவ வே...'' என்றபடியே, டீயை ஒரு மடக்கு குடித்தார், அண்ணாச்சி.
''எந்த ஊர்ல ஓய் இந்த அநியாயம்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''மதுரை சித்திரை திருவிழாவுல, அழகர் ஆத்துல இறங்குறதுக்கு முந்தின நாள், அரசு அலுவலகங்களின் மண்டகப்படிக்கு போய் ஆசிர்வதிப்பது வழக்கம்... ''அந்த வகையில, மாநகராட்சி அலுவலகத்துக்கு போன கள்ளழகருக்கு கமிஷனர் உள்ளிட்டோர் எதிர்சேவை செஞ்சாவ... சுவாமி புறப்பட்டு போனதும், தி.மு.க.,வினரும், மாநகராட்சி அதிகாரிகளும் ஓடி வந்து, சுவாமி வாகனத்தை வழிமறிச்சாவ வே... ''அப்ப, 'மேயர் இந்திராணியம்மா இப்ப தான் வந்தாங்க... சுவாமி ஆசிர்வாதம் வாங்கணும்... திரும்ப மாநகராட்சி ஆபீசுக்கு வாங்க'ன்னு மிரட்டும் தொனியில சொன்னாவ வே... ''எதுக்கு வம்புன்னு அறநிலையத் துறையினர், மாநகராட்சி அலுவலகத்துக்கு மறுபடியும் சுவாமியை அழைச்சிட்டு போனாவ... இதனால, தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அழகர் வர, 45 நிமிஷம் லேட்டாயிட்டு வே...'' என்றார், அண்ணாச்சி. ''பக்தின்னு வந்துட்டா தி.மு.க.,காராளை அடிச்சிக்க முடியாது ஓய்...'' என்ற குப்பண்ணாவே அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார்... ''அரசு பள்ளிகள்ல ஒரு வாரத்துல டீச்சர்ஸ் நடத்தற பாடங்களுக்கான திட்டமிடலை, 'நோட்ஸ் ஆப் லெசன்'னு சொல்வா... சில மாவட்டங்கள்ல, 'லெசன் பிளான்'னும் சொல்வா... ஆனா, ரெண்டுக்கும் வேற வேற அர்த்தம்னு கல்வி அதிகாரிகள் இப்ப, 'கண்டுபிடிச்சு' இருக்கா ஓய்...
''அதாவது ஒரு வாரத்துக்கான திட்டமிடலை, 'நோட்ஸ் ஆப் லெசன்'னும், தினசரி திட்டமிடலை, 'லெசன் பிளான்'னும் சொல்லி, ரெண்டு தனித்தனி கோப்புகளை தயாரிக்க சொல்றாளாம்... அது மட்டுமில்லாம, என்ன பாடம் நடத்தினோம் என்பதை, 'ஒர்க் டர்ன்' என்ற பெயர்ல, தனி கோப்பா குடுக்க சொல்றா ஓய்... ''ஏற்கனவே, 60க்கும் அதிகமான பதிவேடுகளை பராமரிக்கறதால, 'பாடம் நடத்தவே நேரம் இல்லாத சூழல்ல, இன்னும் மூணு கோப்புகளை தயாரிக்க சொல்லி, 'கிளர்க்' வேலை பார்க்க சொல்றாளே'ன்னு டீச்சர்ஸ் எல்லாம் வருத்தப்படறா ஓய்...'' என்றார் குப்பண்ணா. ''யாரால என்ன வேலை செய்ய முடியும்னு தெரிஞ்சு குடுக்கணும்... இன்ஜினியரிங் படிச்சவங்க சாணி அள்ளுவாங்களா...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''விபரமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''கால்நடை துறையில, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஆள் எடுக்கிறாங்க... மாசம் 19 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவாங்க... ''கால்நடை மருத்துவமனையை சுத்தமா வச்சுக்கணும்... மாடு சாணி போட்டா அள்ளணும்... சைக்கிள் ஓட்ட தெரியணும்... 10வது, 'பெயில்' தான் கல்வி தகுதி... ஆனா, இன்ஜினியரிங் படிச்சவங்களும் விண்ணப்பிக்கிறாங்க...
''லட்சக்கணக்குல லஞ்சம் குடுத்து, பணியில சேரவும் ஒரு குரூப் தயாரா இருக்குதுங்க... பணம் குடுத்து இந்த வேலையில சேர்ந்தவங்க, சாணி அள்ள தனியா ஆள் வச்ச கதையெல்லாம் 10 வருஷத்துக்கு முந்தியே நடந்திருக்காம்... தட்டிக் கேட்ட சில டாக்டர்களுக்கு அடியும் விழுந்திருக்குங்க... ''அதனால, 'இந்த வேலைக்கு, அந்தந்த மாவட்டத்துல தொகுப்பூதியத்துல ஆள் போட்டா பிரச்னை வராது... வேலையும் ஒழுங்கா நடக்கும்'னு கால்நடை டாக்டர்கள் சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
''எந்த ஊர்ல ஓய் இந்த அநியாயம்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''மதுரை சித்திரை திருவிழாவுல, அழகர் ஆத்துல இறங்குறதுக்கு முந்தின நாள், அரசு அலுவலகங்களின் மண்டகப்படிக்கு போய் ஆசிர்வதிப்பது வழக்கம்... ''அந்த வகையில, மாநகராட்சி அலுவலகத்துக்கு போன கள்ளழகருக்கு கமிஷனர் உள்ளிட்டோர் எதிர்சேவை செஞ்சாவ... சுவாமி புறப்பட்டு போனதும், தி.மு.க.,வினரும், மாநகராட்சி அதிகாரிகளும் ஓடி வந்து, சுவாமி வாகனத்தை வழிமறிச்சாவ வே... ''அப்ப, 'மேயர் இந்திராணியம்மா இப்ப தான் வந்தாங்க... சுவாமி ஆசிர்வாதம் வாங்கணும்... திரும்ப மாநகராட்சி ஆபீசுக்கு வாங்க'ன்னு மிரட்டும் தொனியில சொன்னாவ வே... ''எதுக்கு வம்புன்னு அறநிலையத் துறையினர், மாநகராட்சி அலுவலகத்துக்கு மறுபடியும் சுவாமியை அழைச்சிட்டு போனாவ... இதனால, தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அழகர் வர, 45 நிமிஷம் லேட்டாயிட்டு வே...'' என்றார், அண்ணாச்சி. ''பக்தின்னு வந்துட்டா தி.மு.க.,காராளை அடிச்சிக்க முடியாது ஓய்...'' என்ற குப்பண்ணாவே அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார்... ''அரசு பள்ளிகள்ல ஒரு வாரத்துல டீச்சர்ஸ் நடத்தற பாடங்களுக்கான திட்டமிடலை, 'நோட்ஸ் ஆப் லெசன்'னு சொல்வா... சில மாவட்டங்கள்ல, 'லெசன் பிளான்'னும் சொல்வா... ஆனா, ரெண்டுக்கும் வேற வேற அர்த்தம்னு கல்வி அதிகாரிகள் இப்ப, 'கண்டுபிடிச்சு' இருக்கா ஓய்...
''அதாவது ஒரு வாரத்துக்கான திட்டமிடலை, 'நோட்ஸ் ஆப் லெசன்'னும், தினசரி திட்டமிடலை, 'லெசன் பிளான்'னும் சொல்லி, ரெண்டு தனித்தனி கோப்புகளை தயாரிக்க சொல்றாளாம்... அது மட்டுமில்லாம, என்ன பாடம் நடத்தினோம் என்பதை, 'ஒர்க் டர்ன்' என்ற பெயர்ல, தனி கோப்பா குடுக்க சொல்றா ஓய்... ''ஏற்கனவே, 60க்கும் அதிகமான பதிவேடுகளை பராமரிக்கறதால, 'பாடம் நடத்தவே நேரம் இல்லாத சூழல்ல, இன்னும் மூணு கோப்புகளை தயாரிக்க சொல்லி, 'கிளர்க்' வேலை பார்க்க சொல்றாளே'ன்னு டீச்சர்ஸ் எல்லாம் வருத்தப்படறா ஓய்...'' என்றார் குப்பண்ணா. ''யாரால என்ன வேலை செய்ய முடியும்னு தெரிஞ்சு குடுக்கணும்... இன்ஜினியரிங் படிச்சவங்க சாணி அள்ளுவாங்களா...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''விபரமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''கால்நடை துறையில, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஆள் எடுக்கிறாங்க... மாசம் 19 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவாங்க... ''கால்நடை மருத்துவமனையை சுத்தமா வச்சுக்கணும்... மாடு சாணி போட்டா அள்ளணும்... சைக்கிள் ஓட்ட தெரியணும்... 10வது, 'பெயில்' தான் கல்வி தகுதி... ஆனா, இன்ஜினியரிங் படிச்சவங்களும் விண்ணப்பிக்கிறாங்க...
''லட்சக்கணக்குல லஞ்சம் குடுத்து, பணியில சேரவும் ஒரு குரூப் தயாரா இருக்குதுங்க... பணம் குடுத்து இந்த வேலையில சேர்ந்தவங்க, சாணி அள்ள தனியா ஆள் வச்ச கதையெல்லாம் 10 வருஷத்துக்கு முந்தியே நடந்திருக்காம்... தட்டிக் கேட்ட சில டாக்டர்களுக்கு அடியும் விழுந்திருக்குங்க... ''அதனால, 'இந்த வேலைக்கு, அந்தந்த மாவட்டத்துல தொகுப்பூதியத்துல ஆள் போட்டா பிரச்னை வராது... வேலையும் ஒழுங்கா நடக்கும்'னு கால்நடை டாக்டர்கள் சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.