பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!

மாணவர்களுக்கு எச்சரிக்கை!

சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, சிதம்பரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பார்த்திபன் காந்தி சிலை அருகே தணிக்கையில் ஈடுபட்டனர்.

லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டி வந்த 18 வயதிற்கு கீழ் உள்ள50க்கும் மேற்பட்டோரின் பைக்குகளை நிறுத்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் அறிவுரை வழங்கி, திரும்ப ஒப்படைக்கப்பட்டது. நகர காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது 3 பள்ளி மாணவர்கள் ஒரே பைக்கில் வந்தனர்.

விசாரணையில் ஆறுமுக நாவலர் பள்ளி மாணவர்கள் என தெரிந்தது. பைக்கை பறிமுதல் செய்து, மோட்டார் வாகன சட்டத்தில் வழக்கு பதிந்தனர். பள்ளி தலைமை ஆசிரியரை அழைத்து மாணவர்களை ஒப்படைத்தனர். பைக்கை ரூ. 15 ஆயிரம் அபராதம் செலுத்தினால் மட்டுமே எடுக்க முடியும்.
Post a Comment (0)
Previous Post Next Post