தேர்வெழுதும் மாணவர்களுக்காக கல்வித்துறை உதவி எண் அறிவிப்பு

தேர்வெழுதும் மாணவர்களுக்காக கல்வித்துறை உதவி எண் அறிவிப்பு

இரண்டாம் ஆண்டு பி.யூ.சி., தேர்வு துவங்கவுள்ளது. தேர்வு தொடர்பான தங்களின் குழப்பம், சந்தேகங்களுக்கு நிவர்த்தி காணும் நோக்கில், கல்வித்துறை இலவச போன் எண்களை அறிவித்துள்ளது.

இது குறித்து, கர்நாடக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

இம்முறை இரண்டாம் ஆண்டு பி.யூ.சி., தேர்வு, நாளை துவங்கி, மே 18 வரை நடைபெறவுள்ளது. மாநிலத்தின் 1,076 தேர்வு மையங்களில், காலை 10:15 மணி முதல், மதியம் 1:30 மணி வரை தேர்வு நடக்கும்.தேர்வெழுத ஆஜராகும் மாணவர்கள், தங்களின் நுழைவு சீட்டை காண்பித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., உட்பட, மற்ற போக்குவரத்துக்கழக பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.

தேர்வு தொடர்பான குழப்பம், சந்தேகங்கள் இருந்தால், அதை நிவர்த்தி செய்து கொள்ள, இலவச உதவி எண் - 080 - 2308 0864 துவங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண், தினமும் காலை 10:00 மணி முதல், மாலை 5:30 மணி வரை செயல்படும். மாணவர்கள், பெற்றோர் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு, தேவையான தகவல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post