சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாள்

சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாள்

சேலம், டிச.8 சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:

மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார ஆய்வாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் இந்த பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நர்சு மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படும். எனவே கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சு, ஆய்வாளர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் வருகிற 15-ந் தேதிக்குள் சேலம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post