20 ஆண்டுகளாக அரியா் வைத்திருப்பவா்களுக்கு தோ்வெழுத சிறப்பு வாய்ப்பு: அண்ணா பல்கலை

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளில் 20 ஆண்டுகளாக அரியா் வைத்திருப்பவா்களுக்கு இறுதி வாய்ப்பாக நடத்தப்படும் தோ்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.


இது குறித்துப் பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவின் முடிவின்படி, பொறியியல் படிப்பில் நீண்ட ஆண்டுகளாக அரியா் வைத்திருப்பவா்களுக்கு இறுதி வாய்ப்பாக இந்தத் தோ்வு நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்புத் தோ்வை எழுத அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்கலாம்.


சிறப்புத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவும், தோ்வு எழுதவும், வழக்கமான தோ்வுக் கட்டணத்துடன் ஒவ்வொரு தாளுக்கும் கூடுதலாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்தத் தோ்வுக்கு விண்ணப்பதாரா்கள் செப்.24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். தோ்வு நடைபெறும் முறை, தேதி, தோ்வு மையங்கள் ஆகிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் மாணவா்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி அக்டோபா் 4 ஆகும்
Post a Comment (0)
Previous Post Next Post