இணைய வழியில் இந்திய அரசின் மத்திய மின்வேதியியல் ஆய்வு மையத்தை பார்க்கலாம் வாங்க…. - பதிவு செய்ய கடைசி தேதி :11-09-2021

இணைய வழியில் இந்திய அரசின் மத்திய மின்வேதியியல் ஆய்வு மையத்தை பார்க்கலாம் வாங்க….
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் அறிவியல்சார் சிந்தனையை தாய்மொழியில் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனமான டி.ஒய்.ஏ.யு (DYAU) இணைந்து பள்ளி மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இணையவழிக் கருத்தரங்கு மற்றும் இணையவழியில் ஆராய்ச்சிக் கூடத்தை பார்வையிடும் நிகழ்வை நடத்த ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது.

வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி(12-09-2021) அன்று காலை 11 மணிமுதல் 1 மணி வரை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் இயங்கும் , காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வு மையத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றும் முனைவர்.சுதாகர் அவர்கள் சி.எஸ்.ஐ.ஆர் பற்றியும், இந்தியாவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் ஆராய்ச்சி நிறுவனங்களை பற்றியும் , மின் வேதியியல் ஆய்வு மையத்தில் செய்து வரும் ஆராய்ச்சிகள் பற்றியும், தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள் பற்றியும் விளக்க உள்ளார். அதைத் தொடர்ந்து மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக மின் வேதியியல் ஆராய்ச்சி மையத்தினை இணையவழியில் அவரவர் வீடுகளில் இருந்தே பார்க்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.

கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்த இணையவழி நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். https://forms.gle/a4ak4uumxzsoTokaA
பதிவு செய்ய கடைசி தேதி :11-09-2021
மேலும் தகவல்களுக்கு
கண்ணபிரான்
ஒருங்கிணைப்பாளர்
CELL:8778201926
Post a Comment (0)
Previous Post Next Post