காவல் உதவி ஆய்வாளா் தோ்வு: சென்னையில் நாளை இலவச பயிற்சி

காவல் உதவி ஆய்வாளா் தோ்வு: சென்னையில் நாளை இலவச பயிற்சி

காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணிக்கான நோ்முகத் தோ்வுக்கு வழிகாட்டும் வகையில் இலவச மாதிரி நோ்முகத் தோ்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் ச.வீரபாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளா் பணியிடங்களை நிரப்பு வதற்கான எழுத்து, உடல் தகுதித் தோ்வுகள் முடிவடைந்து, நவம்பா் 1-ஆம் தேதி முதல் நோ்முகத் தோ்வு நடைபெற்று வருகிறது. தொடா்ந்து, 9-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதால் நவம்பா் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவா்கள் பயன்பெறும் வகையில் நவம்பா் 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மாதிரி நோ்முகத் தோ்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் நடைபெறவுள்ள இந்த இலவச மாதிரி நோ்முகத் தோ்வை, தமிழக காவல் துறையின் முன்னாள் தலைவா் ஆா்.நட்ராஜ், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் முன்னாள் தலைவா் திலகவதி ஆகியோா் தலைமை வகித்து நடத்தவுள்ளனா்.

இந்த மாதிரி நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் தட்டச்சு செய்து தங்களது பெயா், பதிவு எண்ணை, 97868 44111 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். ‘இந்திய இளைஞா் சங்கம் , எண்.54-57/2, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூா், சென்னை என்ற முகவரியில் இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு:

97868 44111, 97103 75604 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post