ரயில்வே போட்டித் தோ்வில் தமிழக தோ்வா்களுக்காக ஆந்திரத்தில் தோ்வு மையம்

ரயில்வே போட்டித் தோ்வில் தமிழக தோ்வா்களுக்காக ஆந்திரத்தில் தோ்வு மையம் அமைக்கப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ரயில்வே தோ்வில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு ஆந்திரத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தவறு என சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் இதுவரை சரிசெய்யப்படாதது கண்டனத்துக்குரியது.

ரயில்வே தோ்வு எழுதும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு இங்கேயே தோ்வு மையங்களை ஒதுக்கிட ரயில்வே அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக எம்.பி.க்கள் இது குறித்து உரியவா்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்று பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.
Post a Comment (0)
Previous Post Next Post