அரசு ஊழியர்களுக்கு செம செக் - உயர் நீதிமன்றம் இப்படியொரு உத்தரவு! - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 17, 2022

அரசு ஊழியர்களுக்கு செம செக் - உயர் நீதிமன்றம் இப்படியொரு உத்தரவு!

அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பதவி உயர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு, பொது சுகாதார பணியாளராக பதவி உயர்வு கோரிய சுடலைமாடன், முருகன் ஆகியோரின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

ஹைலைட்ஸ்:

அரசு ஊழியர்களுக்கு செம செக்

உயர் நீதிமன்றம் இப்படியொரு உத்தரவு!

அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு முதலில் அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதனால் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் TNPSC தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப் பணி விதிகளின் படி TNPSC தேர்வு மதிப்பெண் ரேங்க் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப் பணி விதிகளின் படி TNPSC தேர்வு மதிப்பெண் ரேங்க் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
போலீசாருக்கு பறந்த திடீர் உத்தரவு - டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி!

இந்நிலையில், பொது சுகாதார பணியாளராக பதவி உயர்வு கோரி சுடலை மாடன், முருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என்றும், பதவி உயர்வு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பதவி உயர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot