சட்டசபை கூட்டத் தொடரால் கல்லுாரிகளுக்கு விடுப்பு இல்லை

சட்டசபை கூட்டத் தொடர் முடியும் வரை அரசு மற்றும் உதவி பெறும் கல்லுாரிகள், அலுவலகங்கள் செயல்பட கல்லுாரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை கூட்டத் தொடர் ஏப்., 6 முதல் மே 10 வரை துறைகள் வாரியாக நடக்கிறது. அனைத்து மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்கள், அரசு, உதவிபெறும் கல்லுாரி முதல்வர்கள், ஆசிரியர், அலுவல பணியாளர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும்.

இன்று (ஏப்.,9) வழக்கம் போல் அலுவலகங்கள் செயல்படும். ஏப்., 11ல் உயர்கல்வி துறை மீதான விவாதம் நடக்கிறது.

தேவைப்படும் தகவல்களை தாமதமின்றி அனுப்பி வைக்க மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post