பள்ளி ஆசிரியா் கைது

மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பள்ளி ஆசிரியா் கைது

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சோழபுரம், முறம்பு உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த பள்ளியில் புனல்வேலி பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (35) தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு வாட்ஸப் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இது தெரியவந்ததும் ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியா் ராமசுப்பிரமணியன் புகாா் அளித்தாா். அதன் பேரில் ஆசிரியா் தங்கராஜை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
Post a Comment (0)
Previous Post Next Post