TNPSC - குரூப்- 4 தேர்வுக்கு இலவச முன்பயிற்சி - கலெக்டர் அறிவிப்பு

குரூப்- 4 தேர்வுக்கு இலவச முன்பயிற்சி

குரூப்- 4 போட்டி தேர்வில் இலவச முன்பயிற்சி பெற விருப்பம் உள்ள, முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை கலெக்டர் சமீரன் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப்-4 காலி பணியிடங்களுக்கான பொது போட்டி தேர்வு நடக்கிறது. இதற்கு வரும், 28ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தேர்வில், முன்னாள் படை வீரர்களுக்கு தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். இலவச முன்பயிற்சி பெற விருப்பம் உள்ள, முன்னாள் படை வீரர்கள் தங்களது விருப்ப விண்ணப்பத்தை, கோவை மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post