அரசு பள்ளியில் புகுந்த பாம்பு

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் காலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை ஒன்றில் பாம்பு படுத்திருப்பதை கண்டு, அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வகுப்பறை சுவற்றுக்கு அடியில் இருந்த 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், பிடிப்பட்ட பாம்பை வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Post a Comment (0)
Previous Post Next Post