முதுநிலை பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்பிளான் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இதில் சோ்வதற்கான கலந்தாய்வு ஜன.3-ஆம் தேதி முதல் பிப்.1-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, கேட் தோ்வா்களுக்கான கலந்தாய்வு, திங்கள்கிழமை தொடங்கி, ஜன.5- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு பின்னா், டான்சட் தோ்வா்களுக்கான கலந்தாய்வு ஜன.11-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post