இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கோரி முதல்வருக்கு மனு

13:இடை நிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்க ளாக பதவி உயர்வு வழங்க கோரி தமிழக முதல்வருக்கு, ஈரோடு கலெக்டர் வாயிலாக மனு அளித்தனர்.

இந்திய பள்ளி ஆசி ரியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் பிரகாசம், தமிழ்நாடு டைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் ஈரோடு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி வாயிலாக தமி ழக முதல்வருக்கு மனு அளித்தனர். அந்த மனு வில் அவர்கள் தெரிவித் துள்ளதாவது: மத்திய அரசின் இடை நிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை, மாநில இடைநிலை ஆசிரி யர்களும் வழங்கிட நடவ டிக்கைஎடுக்கவேண்டும்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சிக ளில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்க ளையும், பட்டதாரி ஆசி ரியர்களாகபதவி உயர்வு வழங்கிட வேண்டும். தமிழக அரசு ஊழியர்க ளுக்கு அகவிலைப்படி உயர்வினை வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை-2020ஐ தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண் டும். ஆசிரியர்களுக்கு உயர்கல்வி கற்றலுக்கான ஊக்கத்தொகையைமீண் டும் அமல்படுத்தி வழங் கிட வேண்டும்.

அரசு பள்ளி மாண வர்களுக்கு மருத்துவம், தொழில்நுட்ப கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5சதவீதம் இட ஒதுக் கீடு வழங்கியதை போல, அரசு உதவி பெறும் பள் ளிகளில் படிக்கும் ஏழை. எளிய கிராமப்பு மாண வர்களின் நலன் கருதி அவர்களுக்கென 2.5சத வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்க ளுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று. நேரடியாக செயல்படுத் திடவேண்டும். புதிய ஓய் வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித் திருந்தனர்.
Post a Comment (0)
Previous Post Next Post