செல்வமகள் சேமிப்பு திட்டம்: தமிழக அரசு வேண்டுகோள்

'பெண் குழந்தைகள் பயன் பெற, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேருங்கள்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.


அரசின் செய்திக்குறிப்பு: தமிழக அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய அஞ்சல் துறை சார்பில், செல்வமகள் சேமிப்பு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.


பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு இரண்டு பெண் குழந்தைகள், இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இக்கணக்கை துவக்க குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்த வேண்டும். ஆண்டுக்கு குறைந்தபட்சமாக 250 ரூபாய்; அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்தலாம்.


சேமிக்கும் தொகைக்கு ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி பெறலாம். இத்திட்டத்தின் முதிர்வு தொகையில், 50 சதவீதம் வைப்புத் தொகையை, பெண் குழந்தையின் மேல் படிப்புக்காக பெற்றுக் கொள்ளலாம். முதிர்வுத் தொகையை, பெண் குழந்தையின் திருமணத்தின்போதும்; 21 வயது நிறைவடைந்ததும் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு வரிவிலக்கு உண்டு. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment (0)
Previous Post Next Post