மாணவிக்கு கொரோனா தொற்று - பள்ளிக்கு 5 நாள் விடுமுறை

கீழ்பென்னாத்தூர் அருகே மாணவிக்கு கொரோனா தொற்று காரணமாக பள் ளிக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத் தூர் அடுத்த கீக்களூர் உயர்நிலைப்பள்ளியில் 87 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 11 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தற்போது வகுப்புகள் தொடங்கி நடந்துவருகிறது. இந்நிலையில் கீழ்பென்னாத்தூர் வட்டார மருத் துவ அலுவலர் சரவணன், மருத்துவர் வெங்கடேசன் தலைமையிலான சுகா தார குழுவினர் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசி ரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதன் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் அதே பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறு தியானனது. இதுகுறித்து உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக் கப்பட்டது. இதனிடையே இன்று காலை கீழ்பென் னாத்தூர் வட்டார மருத் துவ குழுவினர் ஏற்பாட் டின்பேரில் பள்ளி வளாகம் முழுவதும் சுகாதார தடுப்பு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது. ஒவ்வொரு வகுப்பறையாக சென்று கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து தூய்மைப்ப டுத்தப்பட்டது.
Post a Comment (0)
Previous Post Next Post