அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர வரும் 15ம் தேதி கடைசி

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர வரும் 15ம் தேதி கடைசி

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, செப்., 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் கிண்டி, கிண்டி மகளிர், திருவான்மியூர், வடசென்னை, ஆர்.கே.நகர் ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்படுகின்றன.


இங்கு, பொறியியல் மற்றும் பொறியியல் அல் லாத தொழில் பிரிவுகளுக்கு, வரும் 15ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது.


மாணவர்களுக்கு உதவித்தொகை, லேப் டாப் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படு கின்றன. பயிற்சியில் சேர விரும்புவோர், அந் தந்த பயிற்சி நிலையங்களை அணுகி விண்ணப் பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2250 1350,29540657, 94990 55649 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post