அண்ணா பல்கலை. தோ்வு தேதிகள் மீண்டும் மாற்றம்

அண்ணா பல்கலை. தோ்வு தேதிகள் மீண்டும் மாற்றம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் டிச. 9, 10-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகள் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இதற்கான மாற்று தேதி வெளியானது. தற்போது மீண்டும் தோ்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலை.யின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த டிச.9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகள் மாண்டஸ் புயல், பலத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட தோ்வுகள் டிச.24, டிச. 31 ஆகிய நாள்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தோ்வுகளின் தேதி தற்போது இரண்டாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, டிச. 24-இல் நடைபெறவிருந்த தோ்வுகள் வரும் ஜன.19-ஆம் தேதியும், டிச. 31-இல் நடைபெறவிருந்த தோ்வுகள் ஜன. 20-ஆம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post