கரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு உயர் கல்வியில் சேர சான்றிதழ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 28, 2022

கரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு உயர் கல்வியில் சேர சான்றிதழ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு உயர் கல்வியில் சேர சான்றிதழ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படித்தவர்கள் கரோனா காலத்தில் பணிபுரிந்ததால் அவர்கள் உயர் கல்வியில் சேர கல்விச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை, கோவை, சென்னை, சேலம் உள்பட பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பயின்றவர்கள், உயர் மருத்துவக் கல்வியில் சேர எம்பிபிஎஸ் கல்வி சான்றிதழ்களை வழங்க மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ''மனுதாரர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் போது முதுநிலை படிப்பில் சேரும் போது அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தப்படி 2 ஆண்டுகள் பணிபுரிய விரும்பாவிட்டால் மனுதாரர்கள் அரசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதார்கள் தரப்பில், மருத்துவ படிப்பு காலத்தை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். கரோனா காலத்தில் பணிபுரிந்துள்ளோம். இதனால் மேலும் பணிபுரிய வேண்டியதில்லை. கல்வி சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் கரோனா காலத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர். இதனால் மனுதாரர்கள் உயர் மருத்துவ கல்வியில் சேர மருத்துவ சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot