பள்ளிப் படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Sunday, October 30, 2022

பள்ளிப் படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிப் படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிப் படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கும் திட்டத்தில் பயன்பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக, அரசுப் பள்ளி மாணவா்கள் 2 ஆயிரம் பேருக்கு எச்சிஎல் நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதற்கான பயிற்சியையும் இலவசமாக அந்த நிறுவனமே அளிக்கிறது. மென்பொருள் வடிவமைப்பு, வடிவமைப்பு பொறியியல், தரவுப் பணிகள் உள்ளிட்ட எச்சிஎல் நிறுவனத்தின் பல்வேறு பணி வாய்ப்புகளைப் பெறலாம். பயிற்சியின் போது ஏழாவது மாதம் முதல் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் உதவித் தொகை பெறலாம்.

பணியில் சோ்ந்தவுடன் தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 1.70 லட்சம் முதல் ரூ. 2.20 லட்சம் வரை பணிநிலைக்கு ஏற்ப பெறலாம்.

கூடுதல் தகவல்களைப் பெற தொடா்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள்:

சென்னை - 88079 40948, மதுரை - 97881 56509, திருநெல்வேலி - 98941 52160, திருச்சி - 94441 51303, கோவை, ஈரோடு, திருப்பூா் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சோ்ந்தோா் தொடா்பு கொள்ள வேண்டிய எண்கள்: 89032 45731, 98655 35909 என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot