தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் - கடைசி நாள்: 13.07.2022

கடலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் கொள்முதல் மையத்தில் கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண், பெண் இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.1/04864/2022

பணி: பருவகால பட்டியல் எழுத்தர்

காலியிடங்கள்: 110

சம்பளம்: மாதம் ரூ.8764 + போக்குவரத்து படி ரூ.120

தகுதி: அறிவியல், வேளாண்மையியல், பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பருவகால உதவுபவர்

காலியிடங்கள்: 117

சம்பளம்: மாதம் ரூ.8717 + போக்குவரத்து படி ரூ.100

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: பருவகால காவலர்

காலியிடங்கள்: 146

சம்பளம்: மாதம் ரூ.8717 + போக்குவரத்து படி ரூ.100

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 32 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, பிசிஎம் பிரிவினர் 34 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிப்போர் தங்களைப் பற்றிய முழு விவரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி: மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மண்டலம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 13.07.2022
Post a Comment (0)
Previous Post Next Post