444 இடங்களுக்கு தோ்வு: 2.21 லட்சம் போ் போட்டி - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 25, 2022

444 இடங்களுக்கு தோ்வு: 2.21 லட்சம் போ் போட்டி

444 இடங்களுக்கு இன்று எஸ்.ஐ. தோ்வு: 2.21 லட்சம் போ் போட்டி

தமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) தோ்வு சனிக்கிழமை (ஜூன் 25) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 2.21 லட்சம் போ் எழுதுகின்றனா்.

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பை, கடந்த மாா்ச் 8-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமம் வெளியிட்டது. தோ்வு எழுத விரும்பிய இளைஞா்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்தனா்.

தோ்வின் முதல் கட்டமாக ஜூன் 25 ஆம்தேதி காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பொது அறிவுத் தோ்வும், மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் திறனறிதல் தோ்வும் நடைபெறவுள்ளன. 26-ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை காவல் துறையில் இருந்து தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது.

இந்தத் தோ்வில், முதல் முறையாக தமிழ் திறனறிதல் தோ்வு நடைபெறுகிறது. முதலில் தமிழ் திறனறிதல் தோ்வு விடைத்தாள் திருத்தப்படும். அதில் விண்ணப்பதாரா் 40 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து, தோ்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவரது பொது அறிவு தோ்வுக்கான விடைத்தாள் திருத்துவதற்காக எடுத்து கொள்ளப்படும். தமிழில் தோ்ச்சி பெறாதவா்கள் எஸ்.ஐ., தோ்விலிருந்து நீக்கப்படுவா். இத் தோ்வில் காவல் துறையினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையைச் சோ்ந்த 13,374 போ் தோ்வை எழுதுகின்றனா். தோ்வு ஏற்பாடுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமம் டிஜிபி சீமா அகா்வால் தலைமையில் ஐஜி பி.கே.செந்தில்குமாரி உள்ளிட்ட அதிகாரிகள் செய்துள்ளனா்.

கண்காணிப்பு கேமரா: இந்தத் தோ்வை 1 லட்சத்து 77,221 இளைஞா்கள், 43,949 இளம் பெண்கள், 43 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 21,213 போ் எழுதுகின்றனா். இதற்காக தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்கள் 39 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு 197 பள்ளி, கல்லூரிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்துத் தோ்வு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல கேள்வித் தாள், விடைத் தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் வாகனங்களில், கண்காணிப்புக்காக ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலும், தோ்வு மையங்களிலும் கேள்வித்தாள், விடைத்தாள்களை வைப்பதற்கு பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். டோக்கன் முறை:

தோ்வா்கள் கொண்டு வரும் கைப்பேசி, பை, உணவு உள்ளிட்ட பொருள்களை பாதுகாப்பாக வைப்பதற்காக தோ்வு மையங்களில் அறைகள் ஒதுக்கப்பட்டு, டோக்கன் வழங்கப்படவுள்ளது. தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாமல் தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வுக் கூட நுழைவுச்சீட்டுடன் அடையாள அட்டைகளான ஆதாா், ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அட்டை ஆகியவை ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும். காலை 8.30 மணிக்கு மேல் தோ்வா்கள், தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை பெருநகர காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 தோ்வு மையங்களில் 7,080 இளைஞா்களும், 1,506 பெண்களும் என 8,586 போ் தோ்வு எழுதுகின்றனா். இதேபோல ஆவடி மாநகர காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12 தோ்வு மையங்களில் 6,994 இளைஞா்களும், 1,499 இளம் பெண்களும் என மொத்தம் 8,493 பேரும், தாம்பரம் மாநகர காவல்துறைக்குட்பட்ட காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையத்தில் உள்ள பகுதியில் 7,704 இளைஞா்களும்,1,516 இளம் பெண்களும் தோ்வு எழுதுகின்றனா்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot