இவர்களில் 79 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் (சென்னை,டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம்) பயின்றவர்கள். இந்திய அளவில் முதலிடம் பெற்ற ஸ்ருதி, தமிழக அளவில் முதலிடம் பெற்ற ஆர்.டி.கிருபானந்தன், கர்நாடகா முதலிடம்-வரதராஜ கோயன்கர், ஆந்திரா முதலிடம்-ஏ.பிரபஞ்சன் ரெட்டி, கேரளா முதலிடம்-ஜோஜின் ஆபிரகாம் ஜார்ஜ் ஆகியோர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 8 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்ற 12 மாணவர்களும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்களே.
கடந்த 9 ஆண்டுகளில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற 276 பேர் இந்திய வனப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தேசிய அளவில் எந்த பயிற்சி நிறுவனமும் நிகழ்த்தாத சாதனையாகும்.

No comments:
Post a Comment