துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டமசோதா
பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த துணைவேந்தர்கள் மசோதா நிறைவேறியது. இன்றே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டுவந்தார். உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடக்கும் நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுவது மக்கள் ஆட்சிக்கு விரோதமானது. துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருக்கிறது என முதலமைச்சர் தெரிவித்தார். துணைவேந்தர் நியமன மசோதாவுக்கு சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்பு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டை சாராத ஒருவரை கடந்த ஆட்சியில் துணைவேந்தராக நியமித்தது போன்ற செயல்களுக்கு புதிய மசோதா முடிவுக்கட்டும். பல்கலைக்கழக துணைவேந்தராக ஆளுநர் இருக்கக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் தான் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்திருக்கிறார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக அறிவித்தது.

No comments:
Post a Comment