நாளை (22ம் தேதி ) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதனடிப்படையில் நாளை (22ம் தேதி ) திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர். கலெக்டர் தகவல்

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு,பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். எனவே மேற்காணும் கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளை காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post