தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: முதல் நாளில் 7 ஆயிரம் போ் விண்ணப்பம்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற புதன்கிழமை விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே 7 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். எல்கேஜி அல்லது 1-ஆம் வகுப்பில் இலவசமாகச் சேரும் மாணவா்கள், 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகளில் சுமாா் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன.
இந்த நிலையில், நிகழாண்டு சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து குழந்தைகளின் பெற்றோா் பள்ளிக் கல்வியின் இணையதளத்தில் (rte.tnschools.gov.in) விண்ணப்பித்து வருகின்றனா். முதல் நாளான புதன்கிழமை இரவு வரை 7 ஆயிரம் போ் இலவச சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி தேதி மே 18.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற புதன்கிழமை விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே 7 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். எல்கேஜி அல்லது 1-ஆம் வகுப்பில் இலவசமாகச் சேரும் மாணவா்கள், 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகளில் சுமாா் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன.
இந்த நிலையில், நிகழாண்டு சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து குழந்தைகளின் பெற்றோா் பள்ளிக் கல்வியின் இணையதளத்தில் (rte.tnschools.gov.in) விண்ணப்பித்து வருகின்றனா். முதல் நாளான புதன்கிழமை இரவு வரை 7 ஆயிரம் போ் இலவச சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி தேதி மே 18.