17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த 26 வயது ஆசிரியை போக்சோவில் கைது

துறையூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியையும், அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் துறையூரை சேர்ந்த மாணவனும் கடந்த 5 ஆம் தேதி, திடீரென மாயமாகினர். இது குறித்து, மாணவனின் பெற்றோர் துறையூர் போலீசில் மகனை காணவில்லை எனவும், ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் அளித்தனர். பின்னர், போலீசாரின் தீவிர விசாரணையில் ஆசிரியை சர்மிளா, திருச்சி எடமலைப்பட்டி புதூரில், தனது தோழியின் வீட்டில் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஆசிரியை கைது செய்த போலீசார், மாணவரை மீட்டனர். விசாரணையில், ஆசிரியை திருவாரூரில் மாணவருடன் சுற்றித்திரிந்ததும், பின்னர், தஞ்சை பெரிய கோயிலில் ரகசிய திருமணம் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சர்மிளாவை போக்சோவில் கைது செய்தனர்
Post a Comment (0)
Previous Post Next Post