உயர் கல்வி நிறுவனங்களில் ஆப்லைன், ஆன்லைன் மற்றும் கலப்பு முறையில் தேர்வு நடத்தலாம் - UGC

கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக குறையாத நிலையில், கல்வி நிறுவனங்களில் சில வழிகாட்டு நெறிமு றைகளுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின் றன. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மானியக் குழு ஆப்லைன் முறை யில் மட்டுமே தேர்வை நடத்த வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்ட தாக தகவல்கள் வந்தன.

ஆனால், அது பல்க லைக்கழக மானியக்கு முவால் வெளியிடப்பட வில்லை என்று அது திட்டவட்டமாக தெரி வித்து இருக்கிறது. மேலும் தொடர்ந்து வகுப்புகள், தேர்வுகளை எவ்வாறு நடத்தலாம் என்பது பற் றிய வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானி யக்குழு அறிவித்து இருக் கிறது. அதில் கூறியிருப்பதா வது:

கொரோனாதொற்று உருவானதில் இருந்து உயர்கல்வி நிறுவனங்க ளின் கல்வி செயல்பா டுகளை பல்கலைக்கழக மேலும் சுகாதாரம் மற் றும் குடும்ப நல அமைச்ச கம்,பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்க ளில் கொரோனா வழி காட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத் துவதை உறுதி செய்ய கோரப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு, வளாகங்களை திறப்பது பற்றி உயர்கல்வி நிறுவனங்கள் தகுந்த முடிவை எடுக்கலாம். மேலும் பல்கலைக்க ழக மானியக்குழு வழி காட்டுதல்களின் படி, ஆப்லைன், ஆன்லைன், கலப்பு முறையில் வகுப்பு கள் மற்றும் தேர்வுகளை நடத்தலாம். இதுதவிர கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு மத் திய, மாநில அரசுகளால் அவ்வப்போது வழங் கப்படும் நெறிமுறைகள். வழிகாட்டுதல்கள் வழிமு றைகளை மற்றும் ஆலோச னைகளையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post