பள்ளிகள் மூடப்பட்டதால் பாலின சமத்துவம் பாதிப்பு: யுனெஸ்கோ அறிவிப்பு

கோவிட் பரவல் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டதால் பாலின சமத்துவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக, 'யுனெஸ்கோ' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவிட் பரவலால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி யுனெஸ்கோ வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட் பரவலை தடுக்க ௧௯௦ நாடுகளில் பள்ளிகள் பல மாதங்களாக தொடர்ந்து மூடப்பட்டன.

இதனால் ௧௬ கோடி மாணவ - மாணவியர் பாதிக்கப்பட்டனர். கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் பலருக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் 'ஆன்லைன்' வழியாக கல்வி கற்கும் வசதி, பல நாடுகளில் ஏழை மாணவ, மாணவியருக்கு இல்லை. பல நாடுகளில் கல்வியை பாதியில் நிறுத்தியோர் அதிகரித்துள்ளனர். குறிப்பாக பாலின சமத்துவம் பாதிக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் மூட்பட்டதால் பல நாடுகளில் மாணவியர் பலர் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டு வேலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பள்ளிகள்பள்ளிகள் திறக்கப்பட்ட பின் பள்ளிக்கு வரும் மாணவியர் எண்ணிக்கை குறைந்துள்ளது .பல ஏழை நாடுகளில் மாணவர்கள் கல்வியை நிறுத்தி விட்டு குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். படிப்பதற்காக மட்டுமே பள்ளிகள் என கருதக் கூடாது. பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் உடல் நலம், மன நலம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post