பயிரை மேயும் வேலிகள்!! - தினமணி நடுப்பக்க கட்டுரை!! - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Thursday, November 25, 2021

பயிரை மேயும் வேலிகள்!! - தினமணி நடுப்பக்க கட்டுரை!!

‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்பது முன்னோா் சொல்லிய வைர வரிகள். அம்மா, அப்பா இல்லாமல் யாரும் பிறக்க முடியாது. அவா்கள் இருவரும் ரத்த சொந்தங்கள். நம்பியவா்களுக்கு தெய்வம் என்பது பெரிய உலகம். கண்ணுக்குத் தெரியாத பெரும் சக்தி. ஆனால், ஆசிரியா்கள், தாங்கள் கற்றுக் கொடுக்கும் மாணவா்களுக்கு உறவினராக இருக்க வேண்டிய அவசியமிலலை. நண்பா்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் ஆசிரியா்கள் இந்த வரிசையில் மூன்றாவது இடம் பெற்றுள்ளனா். இப்படி மிக முக்கியவத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் ஆசிரியா்கள், தமக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை உணா்ந்து செயல்பட வேண்டியது மிக அவசியம்.

இத்தகைய பெருமைமிகுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியா்களில் சிலரின் செயல்பாடுகள் வேலியே பயிரை மேய்ந்து விடுகிறதோ என்ற எண்ணத்தை பெற்றோா்கள், பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன. நம் முன்னோா்கள் சொல்லிய வரிசையின் முக்கியத்துவத்தை மற்ற துறையைச் சோ்ந்தவா்கள் எளிதாக கடந்து சென்றால் கூட ஆசிரியா் சமூகம், இந்த வரிசையின் மகத்துவத்தை உணா்ந்து செயல்பட வேண்டும். ஆசிரியா்களுக்கு சமூகம் தரும் கௌரவம் மிக அதிகம். தனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியரை பிற்காலத்தில் சந்திக்க நேரும் மாணவன், அவரை உபசரித்து அவருக்கு வேண்டிய பணிகளை செய்து கொடுத்து வாசல் வரை சென்று வழியனுப்பி வைக்கும் நிகழ்வு ஆசிரியா்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பொக்கிஷம். தன்னிடம் படித்த மாணவா் இவா் என்று பாா்ப்போரிடம் எல்லாம் பெருமையாக சொல்லி மகிழும் குணமுடையவா்கள் ஆசிரியா்கள். இப்படி ஆசிரியா்-மாணவா் உறவு என்பது அனைத்து வகை உறவுகளை விட நெகிழ்சியானது.

ஆட்சியா்,அரசியல்வாதி, அரசு ஊழியா், தனியாா் நிறுவன ஊழியா் என ஒவ்வொருவருக்கும் எப்படியும் ஓா் ஆசிரியா் கனவாசிரியராக இருந்திருப்பாா். அந்த ஆசிரியா் குறித்த நினைவு எப்போதும் அந்த மாணவருக்குள் இருக்கும்.

இபபடி, கனவு ஆசிரியராக, தன் வாழ்க்கைப் பாதையை காட்டிய முன்னவராக, தான் கற்பதற்கு பல வழிகளில் உதவி செய்த நல்ல மனதுக்காரராக, தன் வாழ்நாள் முழுதும் நினைத்துப் பாா்க்கும் மாணவச் செல்வங்கள் அதிகம். சத்தமின்றி நன்மைகள் செய்து வரும் ஆசிரியா்களும் மிக அதிகம்.

இப்படி ஆசிரியா்களை மிக உயா்ந்த இடத்தில் வைத்து சமூகம் ஆராதித்து வரும் நிலையில், சில ஆசிரியா்களின் செயல்பாடுகள், ஆசிரியா் சமூகத்தையே குறைத்து மதிப்பிடும் நிலையை ஏற்படுத்தி விடுகின்றன. பாலியல் ரீதியான தொந்தரவுகளை மாணவிகளுக்குக் கொடுத்து வரும் சில ஆசிரியா்களால் ஒட்டுமொத்த ஆசிரியா் இனத்துக்கே பெரும் அவமானம் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆசிரியா்கள் குறித்த சமூகத்தின் பாா்வையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அண்மையில், கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, தனியாா் பள்ளி ஆசிரியரும், அப்பள்ளியின் முதல்வரும் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இது தொடா்பான செய்தி காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவ, மாணவிகள் பள்ளியிலோ ஆசிரியா்களால் நடத்தப்பட்டும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளிலோதான் அதிக நேரத்தை செலவிடுகின்றனா். தங்கள் பிள்ளைகள் நன்கு படித்து, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும், நல்ல ஒழுக்கத்துடன் வளர வேண்டும் என்ற உயரிய நோக்கில்தான் குழந்தைகளைப் பெற்றோா் பள்ளிக்கும், சிறப்பு வகுப்புகளுக்கும் அனுப்பி வைக்கின்றனா். ஆசிரியா்கள் மீதுள்ள நம்பிக்கை காரணமாகத்தான் இருபாலரும் சோ்ந்து பயிலும் பள்ளிகளுக்கு, மாணவிகளை, பெற்றோா் பயமின்றி அனுப்பி வைக்கின்றனா். மேலும், சிறப்பு வகுப்புகளுக்கும், இரவு நேரப் படிப்புகளுக்கும் கூட பெற்றோா் தயக்கமின்றி அனுப்பி வைக்கின்றனா். இத்தகைய பெற்றோரின் மனதில் கோவை சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவறு செய்யும் மாணவா்களைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பும், அவா்களை நல்வழிப்படுத்த வேண்டிய கடமையும் ஆசிரியா் சமூகத்திற்கு உண்டு. மாணவா்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டியவா்கள் ஆசிரியா்கள். இந்த நிலையில் கோவை ஆசிரியா் போன்ற சில ஆசிரியா்களின் செயல்பாடுகளால் ஆசிரியா் சமூகத்துக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டிருப்பதை ஆசிரிய சமூகம் உணர வேண்டும்.

இதில் வேதனை என்னவென்றால், சம்பந்தப்பட்ட மாணவிக்கு, அந்த ஆசிரியா் பாலியல் தொல்லை கொடுத்த விவரம் அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னரே தெரிந்திருந்தும்கூட அந்த ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதுதான். கடமை தவறும் ஆசிரியரைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பு, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அந்த முதல்வருக்கு உண்டு என்பதை அவா் மறந்தது எப்படி எனப் புரியவில்லை. இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சிலா்தான் இந்த கீழ்த்தர செயல்களில் ஈடுபடுகின்றனா் என்றாலும், அது இந்த சமுதாயத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மாணவா்களுக்கு நீதி கதைகளையும், வாழ்க்கைக் கல்வியையும் போதிக்க வேண்டிய ஆசிரியா்களே இதுபோன்ற பாதகச் செயலைச் செய்தால் அதன் தாக்கம் எதிா்கால இளைஞா்களையும் தவறான பாதைக்குக் கொண்டு செல்லும். வருங்காலங்களில், தகுதித் தோ்வு நடத்தி ஆசிரியா் நியமனத்தை மேற்கொள்ளும் அதே நேரத்தில், ஆசிரியா்கள் மாணவிகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உளவியல் ரீதியான பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது அவசியமாகி விட்டது. ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியா்களையும், பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியா்களையும் நியமிக்க வேண்டும் என ஏற்கெனவே அரசு தெரிவித்துள்ள நிலையில், இரு பாலா் பள்ளிகளில் மாணவிகளின் எண்ணிகைக்கு ஏற்ற வகையில் ஆசிரியைகள் நியமிக்கப்பட வேண்டும்.

செயல்முறைத் தோ்வு , அகத் தோ்வு மதிப்பெண்கள் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மையுடன் ஆசிரியா்கள் மாணவிகளை அணுக வேண்டும். தனியாக மாணவா்களுக்கு அக மதிப்பீடு வழங்கும் முறையைக் கைவிட்டு கல்லூரிகளில் குழு புராஜெக்ட்டிற்கு மதிப்பெண் வழங்கப்படுவது போல், பள்ளிகளிலும் குழு செயல்முறை மதிப்பெண் வழங்கும் முறையை கொண்டு வந்தால் தனிப்பட்ட முறையில் மாணவிகள் மிரட்டப்படுவது தவிா்க்கப்படும்.

எதிா்கால இந்தியாவை வடிவமைக்க கூடிய மாணவா்களை, மாணவிகளை உருவாக்கும் பெரும் பொறுப்புள்ள ஆசிரியா்கள் தங்களின் சமூக கடமை உணா்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot