தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு - ₹32,000 சம்பளத்தில் குவைத்தில் வீட்டு வேலை

தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவ னம் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் வெளி யிட்ட அறிவிப்பு:

குவைத் நாட்டின் குவைத் கேட் பவுன்டே சன் என்ற நிறுவனத்து டன் தமிழக அரசு நிறு வனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வீட்டுப்பெண் பணியா ளர்களை பணியமர்த் துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திட்டுள்ளது. இந்த ஒப் பந்தத்தின்படி வீட்டு பெண் பணியாளர்களாக அரபு நாடுகளில் பணிபு ரிந்து அனுபவமுள்ளவர் களுக்கு மாத ஊதியம் ரூ.32,000, அனுபவம் இல் லாதவர்களுக்கு மாத ஊதியம் ரூ.29,500 வழங் கப்படும்.

வயது வரம்பு 30 முதல் 40 வரை. மேலும் மருத்துவ பரிசோதனை கட்டணம், விசா.விமான பயணச்சீட்டு. உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி, இதர சலுகை குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். இந்த ஒப் பந்தம் இரண்டு வருடம் வரை நீடிக்கும்.

இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப் பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் அறிய, சென்னையில் உள்ள அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவ னத்தை அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு துறை மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மைய அலுவல கத்தை அணுகலாம்.

எனவே குவைத் நாட் டில் வீட்டு பெண் பணி யாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிவரங்களு டன் கூடிய விண்ணப் பத்துடன் கல்வித்தகுதி மற்றும் பாஸ்போர்ட் ஆகி யவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omchousemaidkuwait2l@ gmail.com என்ற மின் னஞ்சலுக்கு விண்ணப் பிக்கலாம்.

வேலைக்கான விவ ரங்களை இந்நிறுவனத் தின் வலைதளம் www. omcmanpower.com மூல மாகவும் இந்நிறு வன தொலைபேசி எண்கள் 044-22505886/044-22500417 மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது 17.11.2023 வரை நடைமுறையில் இருக்கும். விருப்பமுள்ள மனுதாரர்கள் இக்கால கட்டத்திற்குள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், முதலில் பதி வு செய்யும் நபர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்ப டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post