குழந்தைகள் தினத்தையொட்டி ‘ஜூம்பா பூட்கேம்ப்’ டெமோ இலவச வகுப்பு: நவ.14-ம் தேதி ஆன்லைன் நடைபெறுகிறது - கட்டணம் கிடையாது

குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் ஆன்லைனில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஃபிட்னெஸ் @ சாடீஸ் உடன் இணைந்து நடத்தும் ‘ஜூம்பா பூட்கேம்ப்’ ஆன்லைன் டெமோ வகுப்பு வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளது.

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைனில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, குழந்தைகள் தினத்தையொட்டி ‘ஜூம்பா பூட்கேம்’ எனும் ஆன்லைன்டெமோ பயிற்சி வகுப்பை வரும்14-ம் தேதி காலை 9 முதல் 10 மணி வரை நடத்த உள்ளது. இந்த பூட்கேம்பில் 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் பங்கேற்கலாம்.

இந்த பயிற்சி வகுப்பை நடத்தும்சத்யா, பல ஆண்டுகளாக இத்தகைய வகுப்புகளை திறம்படநடத்தி வருபவர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட ஆன்லைன் வகுப்புகளை பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் நடத்தியுள்ளார்.

இந்த ஜூம்பா பூட்கேம்பில் பங்கேற்பதால் குழந்தைகளின் மனஅழுத்தம் குறைவதோடு, தன்னம்பிக்கை, ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும், குழந்தைகளின் உடலிலுள்ள கொழுப்பை கட்டுப்படுத்துவதோடு, அவர்களது உடல் பருமன் குறைந்து, நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

கட்டணம் கிடையாது

பயிற்சி வகுப்பின்போது பங்கேற்பாளர்கள் விளையாட்டு காலணிகளை அணிய வேண்டும். நிகழ்வின்போது ஆடியோ, வீடியோஇணைப்புகளில் இருக்க வேண்டும். இதில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/00108 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஃபிட்னெஸ் @ சாடீஸ் உடன் இணைந்து நடத்துகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post