ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும் - செய்தி வெளியீடு எண்.32 - நாள்: 07.10.2021

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, 3 பேருந்து நிலையங்களில் இருந்து வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும்!

- போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணபன்

செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு எண்.32 நாள்: 07.10.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக வருகின்ற ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, 3 பேருந்து நிலையங்களிலிருந்து 12.10.2021 மற்றும் 13.10.2021 ஆகிய நாட்களில் பஸ்கள் இயக்கப்படும் - மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு R.S. ராஜகண்ணப்பன் தகவல்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக வருகின்ற ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு 12.10.2021 மற்றும் 13.10.2021 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற கீழ்கண்ட தடப்பேருந்துகள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது இயக்கப்பட்டது போன்று கீழ்கண்ட அட்டவணைபடி இயக்கப்படும் மற்றும் இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

பேருந்து நிலையம் மற்றும் இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் பின்வருமாறு
எனவே பயணிகள் மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும். பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Post a Comment (0)
Previous Post Next Post