போக்குவரத்து கழகம் மூலம் மெக்கானிக்கல் என்ஜினியர்களுக்கு தொழில் பழகுனர் பயிற்சி - கலெக்டர் அறிக்கை

போக்குவரத்து கழகம் மூலம் அளிக்கப்பட இருக் கும் தொழில் பழகுனர் பயிற்சிக்கு சேர விண்ணப் பிக்கலாம் என்று கெலெக்டர் தெரிவித்துள்ளார்.


கலெக்டர் அறிக்கை


இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலத்தில் தொழில் பழகுனர் பயிற் சிக்கு இணையதளம் வாயிலாக அக்.16-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் திருநெல்வேலி கோட்ட நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு


அரசுபோக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் மற்றும் தென் மண்டல தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் இணைந்து இயந்திரவியல் (Mechanical), ஆட்டோமொபைல் பிரிவு களில் பொறியியல் பட்டம் அல்லது பட்டயம் பயின்ற மாணவர்களுக்கு தொழில் பழகுனர் பயிற்சியினை வழங்கி வருகிறது.


நடப்பாண்டில் தொழில் பழகுனர் பயிற்சிக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. வேற்கப்படுகின்றன. 2019, 2020 மற்றும் மற்றும் 2021ம் ஆண்டுகளில் மெக்கானிக்கல்/ ஆட்டோமொபைல் பிரிவில் பட்டம் அல்லதுபட்டயம் பெற்ற தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.


இணைய தளத்தில் புதிதாக பதிவு செய்யும் மாணவர்கள் www.boat-srp.com என்ற இணைய தளத்தில் வருகிற 25-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். தொழில் பழகுனர் பயிற்சிக்கு இதே இணையதளத்தில் அக்.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேல்குறிப்பிடப்பட்டுள்ள இணைய தளத்தில் News & Events Column மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக் கையில் அவர் கூறியுள் ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post