அரசு பணியில் நேரடி நியமனம் வயது வரம்பு உயர்வு: தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு துறைகளில் நேரடி பணி நியமனத்தில் சேருவதற்கான வயது வரம்பை 30-ல் இருந்து 32 ஆக அதிகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக அரசின் துறைகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி வயது வரம்பு 30-ல் இருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கருணை அடிப்படையில் சேரும் பணியிடங்களுக்கான வயது உச்ச வரம்பில் தற்போதைய நிலையில் மாற்றம் இல்லை.


மேலும் மாற்றுத்திறனாளி பட்டியலினத்தவர்களுக்கான சட்டப்படியான வயது உச்ச வரம்பு நீட்டிப்பு, மற்றும் தளர்வு உள்ளிட்டவை தொடரும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Official Announcement G.O Click Here
Post a Comment (0)
Previous Post Next Post