தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.50,000 உதவித் தொகை: விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரிகளுக்கு உத்தரவு

தொழிற்கல்வி பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, முதல்வரின் நிவாரண நிதியில் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ள தால், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் உயர் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தொழிற்கல்வியான பிஇ - பிடெக், எம்பிபிஎஸ், சட்டம் உள்ளிட்ட படிப்புகளை படிக்கும் மாணவர் களில், ஏழைக் குடும்பத்தை சேர்ந் தவர்களில், ஆண்டுக்கு 200 பேர் தேர்வு செய்யப்பட்டு, முதல்வ ரின் நிவாரண நிதியின் கீழ் உதவித் தொகைவழங்கப்படுகிறது.இந்தத் திட்டம் 18 ஆண்டுகளாக நடைமு றையில் உள்ளது.

இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு மாணவருக்கும் படிக்கும் காலத் தில், ஒரு முறை மட்டும் தலா ரூ.50,0000 உதவித் தொகைவழங்கப் படும். பயன் பெற விரும்பும் மாண வர்கள், மாவட்ட ஆட்சியர்களி டம் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். அங்கிருந்து விண்ணப் பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முதல் வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப் படும். அவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நிதி உதவி வழங்கப்படும். தற்போது தொழிற்கல்வி படிப்புகளில், ஒற் றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்கள் அதிகரித்து வரும் நிலையில், முதல்வரின் நிவா ரணநிதியில்உதவிகேட்கும்மாண வர்களிடம் இருந்து விண்ணப்பங் கள் வருவது குறைவாக உள்ளது. எனவே, மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தி,மாவட்டஆட்சி யர் அலுவலகங்களில் உரிய விண் ணப்பங்களைப் பெற்று, முதல் வரின் தனிப்பிரிவுக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post